/* */

திருவண்ணாமலையில் 11 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா துவக்கம்

திருவண்ணாமலையில் மாபெரும் புத்தகக் கண்காட்சியை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் 11 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா துவக்கம்
X

புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அரங்கு.

திருவண்ணாமலை ரோட்டரி கிளப் ஆப் மூன் சிட்டி மற்றும் லைட் சிட்டி, பொன்முடி இல்லந்தோறும் நூலகம், கௌரா இலக்கிய மன்றம், அண்ணா நகர் சைக்கிள் ஆகியோர் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சியை சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, தி.மு.க. மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனா்.

திருவண்ணாமலை நகரின் புறவழிச்சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முதல் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், இஸ்லாமிய புத்தக நிலையம், கௌரா பதிப்பக குழுமம், தமிழ் சோலை பதிப்பகம், சிவகுரு பதிப்பகம் என தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பதிப்பாளர்கள் வருகை தந்து 16 அரங்குகள் அமைத்து இந்த புத்தக கண்காட்சியினை நடத்தி வருகின்றனர்.

இந்த புத்தக திருவிழாவில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான அனைத்து விதமான பயனுள்ள புத்தகங்களும், அரசு தேர்வுகள், வங்கி தேர்வுகள் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக கலைஞரின் கடிதங்கள் என்ற புத்தகம் புதியதாக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த புத்தகத் திருவிழாவில் சிறுவர்களுக்கு தேவையான நீதிக்கதைகள், பொது அறிவு, கலை அறிவியல் இலக்கியம், சங்க கால இலக்கியங்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்த புத்தகத் திருவிழாவில் புதிய வரவாக உள்ள கலைஞரின் கடிதங்கள் என்ற புத்தகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கண்காட்சிக்கு வருகைதரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 10 முதல் 30 சதவீத தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்ய உள்ளதாக பதிப்பாளர்கள் தெரிவித்தனர்.

விழாவுக்கு, திருவண்ணாமலை வெற்றித் தமிழா் பேரவையின் தலைவா் ப.காா்த்திக்வேல்மாறன், ரோட்டரி தலைமை வழிகாட்டி எஸ்.கிருஷ்ணகுமாா், திருவண்ணாமலை வியாபாரிகள் சங்கத் தலைவா் எம்.மண்ணுலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Updated On: 25 Sep 2022 2:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...