Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை கோயிலில் பஞ்சாங்கம் வாசிப்பு
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் விநாயகர் சன்னதியில் சிவாச்சாரியார்களால் தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது
HIGHLIGHTS
சித்திரை முதல் நாளான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதனையடுத்து அண்ணாமலையார் கொடிமரத்தின் அருகில் உள்ள செல்வ விநாயகர் சன்னதியில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து சித்திரை முதல் நாளான இன்று சிவாச்சாரியார்கள் பிலவ வருட பிறப்பதையொட்டி தமிழ் பஞ்சாங்கத்தினை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பஞ்சாங்கத்தினை சிவாச்சாரியார்கள் வாசித்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி இன்று காலை முதல் வெளி மாவட்டம் மற்றும் உள்ளூர் பக்தர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.