/* */

திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலை அருகே பெண்ணிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே கோவிலுக்கு சென்ற பெண்ணிடம்  6 பவுன் சங்கிலி பறிப்பு
X

திருவண்ணாமலை புறவழி சாலை சகாய நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜமுனா (வயது 55). இவர் நாவக்கரை பகுதியில் உள்ள ஓம்சக்தி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார்.

ஆடி மாதம் என்பதால் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி முடிந்து ஜமுனா இரவு சுமார் 10 மணி அளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

நாவக்கரை மெயின் ரோடு பகுதியில் ஜமுனா நடந்து வந்தபோது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜமுனாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.

ஜமுனா திருடன், திருடன் என்று கூச்சலிட அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சங்கிலியை பறித்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.இதுகுறித்து ஜமுனா திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 24 July 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?