Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகனங்களில் விற்பதற்காக 4870 டன் காய் பழங்கள் கொள்முதல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரடங்கில் பொதுமக்களுக்கு வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய 4870 டன் காய் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் வணிகம் மற்றும் உழவர் சந்தை சார்பில் பொது மக்கள் பயனடையும் வகையில் 1981 வாகனங்கள் மூலம் விற்பனைக்காக 4879 டன் காய்கறிகள் பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் மாவட்டத்தில் உள்ள 7 குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கைகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட வேளாண் அதிகாரி தெரிவித்தார்