மனு நீதி நாள் முகாம் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள்
மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி வழங்கினார்
HIGHLIGHTS
ஆவூர் ஊராட்சியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 619 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆவூர் ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
கோட்டாட்சியர் வெற்றிவேல், கீழ்பென்னாத்தூர் ஒன்றியக்குழு தலைவர் அய்யாகண்ணு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாட்சியர் சக்கரை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு 619 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சத்து 43 ஆயிரத்து 459 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த விளக்கக் கண்காட்சியை துணை சபாநாயகர் பார்வையிட்டார்.
வேட்டவலம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள புதிய உயர்மின் மாற்றியை இயக்கி வைத்தார்.
முகாமில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடேசன், இணை இயக்குனர் (வேளாண்மை) பாலா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சையத் சுலைமான், உதவி திட்ட அலுவலர் ஜான்சன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையளர்கள் , வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.