/* */

போளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த இரு குழந்தைகள் உயிரிழப்பு

போளூர் அருகே தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்து இரு குழந்தைகள் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

போளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த இரு குழந்தைகள் உயிரிழப்பு
X

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரிய கரம் ஊராட்சி காந்தி நகர் பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்.

கலசப்பாக்கம் வட்டம் காம்பட்டு கிராமத்தில் வசிக்கும் இவரது தங்கை காவியா தனது ஒன்றரை வயது பெண் குழந்தை பவ்யா ஸ்ரீ உடன் சில நாட்கள் முன்பு தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் காவியா நேற்று காலை வீட்டின் எதிரே உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்று உள்ளார். அப்போது வீட்டில் பவ்யா ஸ்ரீயும் , தமிழ்ச்செல்வனின் மகள் சிந்து பாரதியும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து காவியா வீடு திரும்பிய போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காணவில்லை உறவினர்களின் துணையுடன் அந்தப் பகுதியில் அனைவரும் தேடினர்.

அப்போது சேகர் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தரைமட்ட கிணற்றில் இரு குழந்தைகளும் தவறி விழுந்தது தெரியவந்தது தண்ணீரில் மிதந்த இருவரையும் மீட்டு போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இரு குழந்தைகளும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போளூர் துணை வட்டாட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், காவியா இயற்கை உபாதைக்காக வயல்வெளிக்கு சென்றதாகவும், அவரது பின்னால் அவரது மகள் மற்றும் அண்ணன் மகள் இருவரும் வந்துள்ளனர் எனவும், அப்பொழுது இரண்டு பெண் குழந்தைகளும் விவசாய கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதையை கழிப்பதற்கு, சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்த இரு பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 Oct 2023 2:46 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்