/* */

நெல் கொள்முதல் முறைகேடு கண்டித்து போளூரில் விவசாயிகள் சாலை மறியல்

நேரடி நெல் கொள்முதல் முறைகேடு கண்டித்து போளூரில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நெல் கொள்முதல் முறைகேடு கண்டித்து போளூரில் விவசாயிகள்  சாலை மறியல்
X

விவசாயிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்  

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் வேலூர்- சித்தூர் சாலையில் போளூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டரில் அமைந்துள்ளது.

போளூர் சுற்றுவட்டார கிராமங்களில் அனைத்து விவசாயிகளும் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தான் அறுவடை செய்த நெல்லை கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரும் நெல்லை பல நாள் காத்திருந்து விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதே போல் இன்று காலை சுமார் 7 மணி அளவில் விவசாயிகள் கொண்டு வந்த நிலை சரியாக எடை போடாமல் இடையில் முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டும் கண்டுகொள்ளாததால் இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போளூர் விவசாய சங்கத் தலைவர் பார்த்திபன் தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே சித்தூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று சுமார் 8 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரை மணி நேரம் நீடித்த இந்த சாலைமறியலில் போளூர் காவல்துறையினருக்கு தகவல் அறிந்து உடனே விரைந்து வந்து விவசாயிகளிடம் அதிகாரியிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் மறியலை கைவிடுங்கள் என்று கூறினர்.

ஆனால் விவசாயிகள் மறியலை கைவிடுவதாக இல்லை உடனே காவல்துறையினர் போளூர் கிராம நிர்வாக அதிகாரி மகாலிங்கம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், சங்கர் போன்றவர்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சூப்பிரண்டு தாமோதரன் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் இதுபோல் தவறு நடக்காது என்று ஒழுங்குமுறை விற்பனை கூடம் சூப்பிரண்டு உறுதி கூறினர்.

பிறகு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த மறியல் போராட்டத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 4 May 2022 1:33 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்