/* */

படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில், நாளை ஆடி வெள்ளி விழா ரத்து

படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில், நாளை ஆடி வெள்ளி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படும்

HIGHLIGHTS

படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில்,  நாளை ஆடி வெள்ளி விழா ரத்து
X

படவேடு ரேணுகாம்பாள் கோவில்

போளூர் அடுத்த, படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில், நாளை ஆடி வெள்ளி விழா ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த படவேடு கிராமத்தில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதத்தன்று ஆடி வெள்ளி விழா கொண்டாடப்படுவது வழக்கம். பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, குல தெய்வ வழிபாடு நடத்துவர். அப்போது, பொங்கல் வைத்து படையலிடுதல், சிலை சுற்றுதல், அங்கப்பிரதட்சணம் வருதல், காது குத்தல் போன்றவற்றில் ஈடுபடுவர்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக, ஆடி வெள்ளி விழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால், சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி மட்டும் நடத்தப்படும். அப்போது பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து வந்து, அம்மனை தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது

Updated On: 22 July 2021 8:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!