/* */

சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றினர்.

HIGHLIGHTS

சேத்துப்பட்டு பகுதியில் உள்ள  ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
X

ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வருவாய் துறையினர்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் ஐம்பத்தி ஆறு ஏக்கரில் அமைந்துள்ள நார்த்தி ஏரியில், அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்பேரில், வருவாய்த்துறை அதிகாரிகள் ஏரியை அளவீடு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இந்த நடவடிக்கையின்போது வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறை ஆய்வாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 30 Oct 2021 8:33 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்