/* */

சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2.5டன் ரேஷன் அரிசி மூட்டைகள் : போலீசார் பறிமுதல்

திருவண்ணாமலை அருகே சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 .5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2.5டன் ரேஷன் அரிசி மூட்டைகள் : போலீசார் பறிமுதல்
X

திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்த கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூரை அடுத்துள்ள கீழ்கரிப்பூர் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்படி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேகாமதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி ,மணி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே சென்ற சரக்கு வேனை வழிமறித்த போலீசார் சோதனை நடத்த முயன்றனர்.

ஆனால் போலீசாரை கண்டதும் வேன் டிரைவர் உட்பட 2 பேர் தப்பிச் சென்றனர். இதன் பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது 2.5 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர் .மேலும் தப்பிச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Updated On: 19 July 2021 8:27 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  4. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  7. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  9. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!