/* */

கண்ணை கட்டி 2 நிமிடங்களில் 106 தேங்காய்களை உடைத்து மாணவி சாதனை

உலக சாதனை நிகழ்ச்சிக்காக அரசுப்பள்ளி மாணவி கண்ணை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு 2 நிமிடத்தில் 106 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்தார்.

HIGHLIGHTS

கண்ணை கட்டி 2 நிமிடங்களில் 106 தேங்காய்களை உடைத்து மாணவி சாதனை
X

முனுகப்பட்டு கிராமத்தில் உலக சாதனை நிகழ்ச்சிக்காக அரசு பள்ளி மாணவி சுருதி கண்ணை கட்டி கொண்டு 2 நிமிடங்களில் 106 தேங்காய்களை உடைத்தார்.

ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள நாராயண சாமி செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவி சுருதி. இவரது தங்கை காஞ்சனா இரு கைகளை விரித்தபடி தரையில் படுத்து கொள்ள அவரை சுற்றி 106 தேங்காய்கள் பரப்பி வைக்கப்பட்டது. பின்னர் மாணவி சுருதி தன் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு 2 நிமிடத்தில் 106 தேங்காய்களை உடைத்து உலக சாதனை படைத்தார். இந்நிகழ்வை உலக சாதனை ஆவண நிறுவனம் வீடியோ படக்காட்சிகளில் படமாக்கியது. செய்யார் கல்வி மாவட்ட அலுவலர் நளினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் சாதனை புரிந்த மாணவிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Updated On: 7 March 2022 3:14 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்