/* */

விதை விற்பனை நிலையங்களில் விதிமீறலா? செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் பறக்கும்படை குழுவினர் ஆய்வு…

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் பறக்கும்படை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

விதை விற்பனை நிலையங்களில் விதிமீறலா? செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் பறக்கும்படை குழுவினர் ஆய்வு…
X

விதை விற்பனை நிலையங்களில் திடீரென ஆய்வு செய்த  பறக்கும் படையினர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சில விதை விற்பனை நிலையங்களில் விதிமுறை மீறல்கள் இருப்பதாக புகார் எழுந்தது. அவ்வாறு விதமுறை மீறல் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் கொண்ட குழுவினர் அடங்கிய பறக்கும்படை அமைத்து திடீரென சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விதைகள் விற்பனை செய்ய உரிமம் உள்ளதா? இருப்பு புத்தகம், விற்பனை புத்தகம், தகவல் பலகை போன்றவைகள் விதை சட்டம் 1966 மற்றும் விதைக்கட்டுப்பாடு ஆணை 1983-இன் படி கடைபிடிக்கின்றார்களா? என வேலூர் விதை ஆய்வு துணை இயக்குநர் சோமு தலைமையிலான விதை ஆய்வாளர்கள் பறக்கும் படை அமைத்து திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது சந்தேகிக்கும் வகையில் இருந்த 15 விதை மாதிரிகளை சேகரித்து முளைப்பு திறன் பரிசோதனை செய்யவும் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பயிர் பருவம் தெளிவாக குறிப்பிடாமலும், விதை பரிசோதனை முடிவுகள், பதிவுச்சான்று, வெளி மாநில விதைகளுக்கான படிவம்-2 ஆகிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 5,694 கிலோ எடையுள்ள 7 விதை குவியல்கள் கண்டறியப்பட்டது.

அந்த விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தடை செய்து பறக்கும் படையினர் உத்தரவிட்டனர். தொடர்ந்து விதை ஆய்வு துணை இயக்குநர் கூறுகையில், விவசாயிகள் விதை வாங்கும் முன் பயிர், ரகம், பருவம், காலாவதி நாள் மற்றும் வயது போன்ற அடிப்படை விபரம் நன்கு அறிந்து வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் ஆலோசனை செய்து அவர்களின் பரிந்துரைப்படியே விதைகளை வாங்கி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.

Updated On: 24 Dec 2022 1:55 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்