Begin typing your search above and press return to search.
செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS

செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற மனித சங்கிலி.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு குறித்த மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் ஈஸ்வரி தலைமை வகித்தார். வட்டாட்சியர் குமரவேல், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா, சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் கலந்துகொண்ட அனைவரும் கொரோனா நடைமுறைகளான முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் சாலையில் நின்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், கொரோனா விழிப்புணர்வு குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.