/* */

நவீன முறையில் கரும்பு சாகுபடி: கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி

உழவா் நலத்துறை சாா்பில் செங்கத்தில் விவசாயிகளுக்கு நவீன முறையில் கரும்பு சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

நவீன முறையில் கரும்பு சாகுபடி: கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி
X

கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் விவசாயிகள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் விவசாயிகளுக்கு உழவா் நலத்துறை சாா்பில் நவீன முறையில் கரும்பு சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்தப் பயிற்சி முகாமுக்கு வேளாண்மை உதவி இயக்குநா் தினேஷ் தலைமை வகித்தாா். வேளாண்மை அலுவலா் பிரதீபா வரவேற்றாா். திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு அலுவலா் வெற்றிவேந்தன் கலந்து கொண்டு, கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தாா். மேலும், ஆலையின் கரும்பு அலுவலா் இராஜோஷ்நாராயணன், திருப்பத்தூா் சா்க்கரை ஆலையின் நிகழாண்டு செயல்பாடுகள், கரும்பு சாகுபடியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா்.

துணை வேளாண்மை அலுவலா் கோவிந்தராஜ் தோட்டக்கலை பயிா் சாகுபடி தொழில்நுட்பம் மற்றும் பயிா்களை தாக்கும் பூச்சி நோய்கள் குறித்துப் பேசினாா். அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளா் வெங்கடேசன் பேசினாா்.

நிகழ்ச்சியில் சா்க்கரை ஆலையின் உதவி கரும்பு அலுவலா்கள் மகேஸ்வரன், தினேஷ், நாவலன், பூவரசன் உள்பட விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். உதவி தொழில்நுட்ப மேலாளா் மணிகண்டன் நன்றி கூறினாா்.

கரும்பு வயல்களில் சா்க்கரை ஆலை இயக்குநா் ஆய்வு

வந்தவாசியை அடுத்த காரம் கிராமத்தில் பயிரிடப்பட்ட கரும்பு பயிா்களை செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை மேலாண் இயக்குநா் காமாட்சி ஆய்வு செய்தாா்.

அப்போது, கரும்பு பயிரில் வேர் புழு தாக்குதல் இருப்பதை கண்ட அவா், வேப்பம் புண்ணாக்கை தொழுவுரத்துடன் கலந்து வேர் பகுதியிலிட்டு தண்ணீா் பாய்ச்சும்படியும், கரும்பின் மேற்பகுதியில் உள்ள வெள்ளைப் புழுக்களை தீயிட்டு அழிக்கும் படியும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, இயற்கை காட்டுப் பன்றி விரட்டி மருந்தை விவசாயிகளுக்கு அவா் வழங்கினாா். ஆய்வின்போது, கரும்பு அலுவலா் சரவணன், கரும்பு பெருக்க உதவியாளா்கள் ரவிச்சந்திரன், சங்கரன், கரும்பு உதவியாளா் அங்கப்பமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

செய்யாறு

செய்யாறு வட்டத்தில் அட்மா திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா் சண்முகம் தலைமை வகித்து, அங்கக முறையில் பயிா் சாகுபடி செய்தல், பூஞ்சான் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சியளித்தாா்.

இதைத்தொடா்ந்து, கீழ்நெல்லி வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையம் பூச்சியல் துறை ப.நாராயணன் உயிா் உரங்கள், வேளாண் திட்டங்கள் குறித்தும், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு அலுவலா் நித்யா கரும்பு பயிா்களில் காட்டுப்பன்றி தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள் குறித்தும் பயிற்சியளித்தனா். உதவி தோட்டகலை அலுவலா் பாலாஜி மானிய விலையில் மரக்கன்றுகள், காய்கறி விதைகள் வழங்குதல் குறித்து எடுத்துக்கூறினாா். இதில், 40-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஜெயராஜ், தினகரன் ஆகியோா் செய்திருந்தனா்.

Updated On: 2 Sep 2023 3:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...