/* */

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு அபராதம்

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தானிப்பாடி காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

HIGHLIGHTS

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு அபராதம்
X

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மொத்தக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கே.காமராஜ். இவர் மொத்தக்கல் அரசு கால்நடை மருத்துவமனையில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் குரு என்பவருக்கும் இருந்த முன்பகை காரணமாக பணி முடிந்து திரும்பும்போது காமராஜை ஒரு கும்பல் தாக்கியது. இது தொடா்பாக தானிப்பாடி காவல் உதவி ஆய்வாளா் இளங்கோவன் முதல் திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளா் என அனைத்து உயரதிகாரிகளிடம் புகாரளித்தும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இது தொடா்பாக காமராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கின் அடிப்படையில், அவரது புகாா் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளா் இளங்கோவனின் தூண்டுதல்பேரில், காமராஜ் வீடு புகுந்து சிலா் தாக்கி, அவர் மீது பொய்ப் புகாரும் கொடுத்தனா். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில், காமரஜிடம் காவல்துறையினா் வெற்று காகிதத்தில் கையெழுத்து வாங்கி பொய் வழக்கும் பதிந்தனா்.

இவ்வாறு மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், மனுதாரருக்கு ஒரு மாதத்துக்குள் ரூ.25 ஆயிரத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்கிவிட்டு, அந்தத் தொகையை உதவி ஆய்வாளா் இளங்கோவனிடம் வசூலித்துக் கொள்ளலாம் என தீர்ப்பளித்தார். மேலும் இளங்கோவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Sep 2021 7:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்