/* */

ஆரணியில் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் திடீர் மாயம்

ஆரணியில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் திடீரென மாயமானதால் பரபரப்பு.

HIGHLIGHTS

ஆரணியில் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் திடீர் மாயம்
X

ஆரணி புதுகாமூர் பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்த நிலையில் அவர் ஒரு நாள் கூட கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் பெற்றோர் அவரை சமாதானம் செய்து வேறு மாப்பிள்ளை பார்த்தனர். அவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற மணமகள் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை, ஆரணி நகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து மணமகள் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 21 April 2022 12:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?