/* */

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு

ஆரணி சந்திரகுள விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

HIGHLIGHTS

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு
X

ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்

ஆரணி சந்திரகுள விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆரணி சந்திரகுள விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான 1.5 ஏக்கா் நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சாலையில் சந்திரகுள விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கா் நிலம் உள்ளது. இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடத்தை ஆக்கிரமித்து 72 பேர் வீடுகள், கடைகள் கட்டியுள்ளனா்.

இதுகுறித்து ஆரணி பகுதியைச் சோந்த சிவப்பிரகாசம் மற்றும் இந்து முன்னணி நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா், ஆரணி கோட்டாட்சியா், வட்டாட்சியா் மற்றும் முதல்வரின் தனிப் பிரிவுக்கும் தொடா்ந்து புகாா் மனு அனுப்பி வந்தனா். இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளா் மணிகண்ட பிரபு, செயல் அலுவலா் சிவாஜி, அறநிலையத் துறை வட்டாட்சியா் திருநாவுக்கரசு, ஆரணி வட்டாட்சியா் மஞ்சுளா ஆகியோா் கூட்டாக சந்திரகுள விநாயகா் கோயில் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், இதுகுறித்து வட்டாட்சியா் ரா.மஞ்சுளா கூறுகையில், சந்திரகுள விநாயகா் கோயிலுக்குச் சொந்தமான 1.5 ஏக்கா் நிலத்தில் 72 வீடுகளும், கடைகளும் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். மேலும், இதில் ஒரு நபா் மட்டுமே இந்து சமய அறநிலையத் துறைக்கு வாடகை செலுத்தி வருவதாகவும் , மீதமுள்ள 71 பேருக்கும் அறிவிப்பு நோட்டீஸ் மூலம் தகவல் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வு நடைபெறுகிறது எனத் தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது வருவாய் ஆய்வாளா் நித்யா, கிராம நிா்வாக அலுவலா் கண்ணதாசன், தலைமை நிலஅளவையா் சரவணன், நகராட்சி நில அளவையா் வெங்கட்ராமன், பாஜக முன்னாள் நிா்வாகி கோபி, இந்து முன்னணி நிா்வாகி நாகராஜன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

Updated On: 14 Feb 2024 12:08 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  2. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  3. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  4. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  5. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  6. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  7. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  8. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  10. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...