/* */

களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்

களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் மோட்டார்சைக்கிளில் எடுத்து வந்த ரூ.2 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்
X

பைல் படம்.

களம்பூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் மோட்டார்சைக்கிளில் எடுத்து வந்த ரூ.2 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

போளூர் துணை தாசில்தார் சிவலிங்கம் தலைமையில் ஏட்டு நிர்மல்குமார், பெண் போலீஸ் சங்கீதா உள்ளிட்ட பறக்கும் படையினர் நேற்று இரவு 11 மணியளவில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது இலுப்பகுணம் கூட்ரோட்டில் அதிவேகமாக சென்ற ஒரு மோட்டார்சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த படவேடு மங்களாபுரம் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்தை வைத்திருந்தார்.

குடும்ப தேவைக்காக பிறரிடம் கடன் வாங்கி பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் கூறினார். ஆனால், அவரின் கருத்தை பறக்கும்படையினர் ஏற்கவில்லை. இதையடுத்து ரூ.2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து களம்பூர் தேர்தல் நடத்தும் அதிகாரி லோகநாதனிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 8 Feb 2022 1:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்