Begin typing your search above and press return to search.
பொது இடத்தில் விநாயகர் சிலை: வருவாய்த்துறையினர் அகற்றினர்
ஆரணியில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வருவாய்த்துறையினர் அகற்றினர்
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாக நதி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள விநாயகர் கோவில் முன்பாக பொது இடத்தில் சிலர் விநாயகர் சிலையை வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த ஆரணி வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று விநாயகர் சிலையை அகற்றி வாகனத்தில் ஏற்றி சென்றனர். மேலும் சிலையை வைத்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்