அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்
ஆரணியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தேவிகாபுரம் போளூர் ஆகிய இடங்களில் அரசு மற்றும் சுயநிதியுதவி பெறும் 14 பள்ளிகளை சேர்ந்த 2,111 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில், விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது
ஆரணியில் சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அந்தப் பள்ளியைச் சேர்ந்த 565 மாணவ, மாணவிகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி - 427, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - 151, எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி - 78, இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி - 29, நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி - 65, புனித வளனாா் பள்ளி - 147, குன்னத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி - 96, அக்ராபாளையம் - 57, முள்ளண்டிரம்- 56 என 10 பள்ளிகளைச் சேர்ந்த 1,671 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன், தலைமை வகித்து சைக்கிள்களை வழங்கினாா். ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி, முன்னாள் எம்எல்ஏக்கள் சிவானந்தம், ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் மகேஸ்வரி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் சுந்தா், மோகன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அருணாகுமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
போளூா் சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 274 மாணவ, மாணவிகள், பெரணமல்லூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - 69, பெண்கள் மேல்நிலைப் பள்ளி -73, மடம் அரசு மேல்நிலைப் பள்ளி -24 என 440 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன் கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை காயத்ரி தலைமை வகித்தாா்.
ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கிடேசன், தலைமை ஆசிரியா்கள் தனசேகரன், மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பரிமளா ரமேஷ் வரவேற்றாா்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சிவானந்தம், ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலாளர் மாமது, பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.