/* */

ஒமிக்ரான் அறிகுறி பாதித்த பெண்ணின் சகோதரருக்கும் கொரோனா

ஆரணியை சேர்ந்த ஒமிக்ரான் அறிகுறி பாதித்த பெண்ணின் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஒமிக்ரான் அறிகுறி பாதித்த பெண்ணின் சகோதரருக்கும் கொரோனா
X

காங்கோ நாட்டில் இருந்து இந்தியா திரும்பிய ஆரணியை அடுத்த பையூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரியில் தொடர் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சங்கீதாவின் தந்தை ராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருவண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 2-வது முறையாக அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வெளியானது அதில் சங்கீதாவின் சகோதரர் சதீஷ் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவரை சுகாதாரத்துறையினர் உடனடியாக திருவண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது சம்பந்தமாக ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா தலைமையில் சுகாதார களப்பணியாளர்கள் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை கண்காணித்து வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்