/* */

டிசம்பருக்குள் வரி செலுத்த ஆரணி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

டிசம்பருக்குள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினை செலுத்துமாறு பொதுமக்களுக்கு ஆரணி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

HIGHLIGHTS

டிசம்பருக்குள் வரி செலுத்த ஆரணி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
X

நகராட்சிக்கு வரி செலுத்தி முழு ஒத்துழைப்பு தருமாறு நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஆரணி நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி , குடிநீர் கட்டணம், தொழில்வரி மற்றும் குத்தகை இனங்கள் கடை வாடகை என நிலுவை வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் நிலுவை இன்றி செலுத்த வேண்டும்.

அவ்வாறு செலுத்தாத உரிமை தாரர்களின் பெயர், வரி விதிப்பு எண், முகவரி மற்றும் நிலுவை தொகைகள் அனைத்தும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் விளம்பரப்பலகை ,தொலைக்காட்சி மற்றும் தினசரி நாளிதழ்கள் மூலம் இறுதியாக வெளியிடப்படும், மேலும் கடை வாடகை நிலுவைத் தொகை அதிகம் உள்ள கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும்.

எனவே நிலுவைத் தொகைகள் உடன் செலுத்தி மேல் நடவடிக்கையை தவிர்க்கவும் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும் , ஜனவரி 1-ஆம் தேதி முதல் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்

Updated On: 15 Dec 2021 7:38 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  4. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  7. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  9. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!