/* */

ஆரணி டூவிலர் விபத்து: காயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

ஆரணி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதலில் படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

HIGHLIGHTS

ஆரணி டூவிலர் விபத்து: காயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிைய அடுத்த விண்ணமங்கலம் அருகே கடந்த 22-ந்தேதி இரவு 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவரும் வாத்து மேய்க்கும் தொழிலாளியின் மகனுமான அற்புதராஜ் (வயது 19) என்பவரும், மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நெசல் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அற்புதராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல் கார்த்திக் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து, ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!