Begin typing your search above and press return to search.
திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 30 லட்சம்
திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக 30,37,662 ரூபாய் செலுத்தியுள்ளனர்.
HIGHLIGHTS
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக இதில் குறைந்த அளவு ஊழியர்களே பங்குபெற்றனர். மொத்தம் 30,37,662 ரூபாய் ரொக்கம், 307 கிராம் தங்கம், 805 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.