/* */

திருத்தணி அருகே மூன்று வீடுகளில் அடுத்தடுத்து பணம், நகை கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே மூன்று வீடுகளில் அடுத்தடுத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருத்தணி அருகே மூன்று வீடுகளில் அடுத்தடுத்து பணம், நகை கொள்ளை
X

திருத்தணி அருகே கொள்ளை நடந்த வீடுகளில் ஒன்று.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆற்காடுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த தேவன்(59) குடும்பத்தினர் நேற்று இரவு முன் பக்கத்தில் தளம் போட்ட வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பின் பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 15 சவரன் நகை, ரூ. 38 ஆயிரம் கொள்ளையடித்தனர்.

பின்னர் பக்கத்து வீட்டில் அவரது தம்பி ஆனந்தன் வீட்டின் பின் பக்க கதவு உடைத்து 4 சவரன் நகை திருடப்பட்டது. அதே பகுதியில் உள்ள வெங்கடரத்தினம் என்பவரின் வீட்டை உடைத்து பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவரது பீரோவில் நகை , பணம் இல்லாததால் கொள்ளையர்கள் திரும்பிச்சென்றுள்ளனர்.

ஒரே நாள் இரவில் மூன்று வீடுகளில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 6 Jan 2022 2:16 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?