/* */

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 262 குற்ற வழக்குகளுக்கு தீர்வு

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 262 குற்ற வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 262 குற்ற வழக்குகளுக்கு தீர்வு
X

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றம். 

திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்ற கண்காணிப்பில் நாடு தழுவிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது, இதில் சுமார் 200 வழக்குகள் சமரச தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதில் 32 மோட்டார்வாகன விபத்து இழப்பீடு வழக்குகளுக்கு சமரசம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு ரூ. 1கோடி 70 லட்சம் பெற்றுத்தரப்பட்டது. 6 சிவில் வழக்குகள் சமரசம் செய்யப்பட்டது, வங்கி வழக்குகள் 11 பைசல் செய்யப்பட்டது. குற்ற வழக்குகள் 262 தீர்வு காணப்பட்டது.

குடும்ப நல வழக்கு ஒன்றிற்கு சமரசம் செய்யப்பட்டு தம்பதியர்கள் சேர்த்து வைக்கப்பட்டது. மொத்தம் 1கோடியே 74லட்சம் தீர்வுக்காணப்பட்டது.

இந்நிகழ்வில் பொறுப்பு சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் அருந்ததி, குற்றவியல் நடுவர் லோகநாதன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கவிப்பிரியா கலந்து கொண்டனர். மேலும் மூத்த வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் பயனாளிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?