/* */

திருத்தணி அருகே பிறந்தநாளில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞர் கைது

Tirunelveli Knife-திருத்தணி அடுத்த வேலஞ்சேரியில் பிறந்தநாளில் பட்டா கத்தியால் இளைஞர் கேக் வெட்டும் வீடியோ வைரராகியுள்ளது.

HIGHLIGHTS

திருத்தணி அருகே பிறந்தநாளில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய இளைஞர் கைது
X

விஷ்ணு

Tirunelveli Knife-திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த வேலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகன் விஷ்ணு (24). ஊரை சுற்றும் வாலிபனான விஷ்ணு கடந்த மாதம் தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது பட்டாகத்தியால் கேக்கை வெட்டி பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடும் வீடியோ இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் வைரலானது.

இதனையடுத்து திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விஷ்ணுவை தேடி வந்தனர்.

இந்நிலையில் வேலஞ்சேரியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று விஷ்ணுவை கையும் களவுமாக கைது செய்தனர்.

பின்னர் திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் கிளை சிறையில் அடைத்தனர். பிறந்தநாளில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 April 2024 5:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா