/* */

திருப்பாச்சூரில் வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்குவதை கண்டித்து குடும்பத்துடன் தர்ணா !

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் வீட்டின் முன்பு தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பாச்சூரில் வீட்டின் முன்பு கழிவுநீர் தேங்குவதை கண்டித்து குடும்பத்துடன் தர்ணா !
X

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாதிக்கப்பட்ட பகுதி குடும்பத்தினர்.

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் தாகூர் காலனியில் வசித்து வருபவர் ஆடலரசு. இவர் வசிக்கும் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டிய ஊராட்சி நிர்வாகத்தினர், தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கழிவுநீர் செல்லுமாறு அமைத்துள்ளனர். இந்த நிலையில் அந்த இடத்துக்கு உரிமையாளர் தனது பகுதிக்குள் கழிவுநீர் வராதபடி தடுப்பு சுவர் அமைத்து தடுத்துவிட்டார்.

வீட்டின் முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீர்.

இதனால் அப்பகுதியில் கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் குளம்போல் ஆடலரசு என்பவரின் வீட்டின் முன்பு தேங்கியது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் இந்திய நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கழிவுநீர் குட்டையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பல வீடுகளில் காய்ச்சல், சளி, சுவாச கோளாறு போன்ற உபாதைகள் ஏற்பட்டு உள்ளது.

ஏற்கனவே கொரோனா இரண்டாவது மக்களை வாட்டி வரும் நிலையில் இதுபோன்ற சுகாதார சீர்கேட்டால் மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்களும் அப்பகுதியில் பரவும் அபாயம் உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்தவுடன் ஊராட்சி நிர்வாகத்தினர் அப்பகுதிக்கு வந்து தெரு மக்களிடையே கழிவுநீர் கால்வாய்கள் வீடுகளின் முன்பு உறை உள்ளதை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கிறோம் என பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு சில வீட்டு உரிமையாளர்கள் ஒத்துழைக்கவில்லை என தெரிகிறது.

Updated On: 10 Jun 2021 9:17 AM GMT

Related News

Latest News

  1. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  3. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  6. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  8. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  9. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  10. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?