/* */

திருட்டு தொழிலில் இருந்து திருந்தி வாழ, மறுவாழ்வு அளிக்குமாறும் போலீஸ் எஸ்பியிடம் மனு

திருவள்ளூரை சேர்ந்த வாலிபர் திருட்டு செயல்களில் இருந்து திருந்தி வாழ, மறுவாழ்வு அளிக்குமாறும் போலீஸ் எஸ்பியிடம் மனு அளித்தார்.

HIGHLIGHTS

திருட்டு தொழிலில் இருந்து திருந்தி வாழ, மறுவாழ்வு அளிக்குமாறும் போலீஸ் எஸ்பியிடம் மனு
X
பைல் படம்

திருவள்ளூரை அடுத்த மப்பேடு சமத்துவபுரம் மேட்டுக்கடை மாதா கோவில் தெருவை சேர்ந்த தமிழ் (எ) தமிழரசன் (27) என்ற வாலிபர் .

நேற்று தனது உறவினர்களுடன் திருவள்ளூரில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்:-

தான் இதற்கு முன் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்த நிலையில் தற்போது எந்த தவறும் செய்யாத பட்சத்தில் தன் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் பொய்யான வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பது வாடிக்கையாக உள்ளது.

தான் தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதால் திருந்தி வாழ்வதற்கு கருணை அடிப்படையில் மன்னிப்பு அளிக்க வேண்டும் எனவும்,

இனிமேல் தன் மீது எந்த ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டாம் எனவும், தான் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டேன் எனவும் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறு தனது உறவினர்களுடன் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுவை அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் அதன் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Updated On: 4 Aug 2021 9:50 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?