/* */

முனீஸ்வரர்,தேவி நாகாத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா

பெரியபாளையம் அருகே பூச்சி அத்திப்பட்டு ஊராட்சியில் மதுரைவீரன், முனீஸ்வரர், தேவி நாகாத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது

HIGHLIGHTS

முனீஸ்வரர்,தேவி நாகாத்தம்மன் கோவில் தீமிதி திருவிழா
X

பூச்சிஅத்திப்பேடு முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு ஊராட்சியில் லட்சுமி அம்மன் கோவில் தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரைவீரன்,ஸ்ரீ முனீஸ்வரர் ஸ்ரீ தேவி நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 10-ம் ஆண்டு தீமிதி திருவிழா நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

இதை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீசெல்லியம்மன் ஆலயத்தில் இருந்து கங்கை நீர்,பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இரவு தேர் பவனி சக்தி கிரகம் ஊர்வலம் நடைபெற்றது.

சனிக்கிழமை மதியம் கோவில் வளாகத்தில் கிராம பொதுமக்கள் சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அக்கினிக்கப்பரை ஊர்வலம் நடைபெற்றது. நேற்று காலை ஸ்ரீசெல்லியம்மன் கோவிலிலிருந்து பால்காவடி அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.

அதன் பின்னர், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம்,தூப-தீப ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. மாலை வேப்பம்பேடு கிராமம் ஸ்ரீசெல்லியம்மன் கோவிலிலிருந்து பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சென்று புனித நீராடிய பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி கொட்டும் மழையில் நடைபெற்றது.

பின்னர், கோவிலுக்கு அருகே அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதன் பின்னர், அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை சுமங்கலி பூஜை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை காலை விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது. இதில்,சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைநாகாத்தம்மன் முரளி தலைமையில் பக்தர்களும், விழா குழுவினர்களும், பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 13 Jun 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!