Begin typing your search above and press return to search.
இருளஞ்சேரி ஏரியில் மருத்துவ கழிவுகள்; பஞ்., தலைவி தம்பியிடம் விசாரணை
இருளஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டியதால் ஊராட்சி மன்ற தலைவியின் தம்பியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த இருளஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் மருத்துவ கழிவுகள் நீர் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நீர் மாசடைவதால் கால்நடைகள் நீர் பருகுவதால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் மப்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஊராட்சி மன்ற தலைவி தமிழ்மொழி தம்பி தமிழ்வாணன் என்பவர் மறைமலை நகரில் உள்ள தனியார் மருந்து தொழிற்சாலையில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கே கொட்டப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதனதை்தொடர்ந்து, அவர் மீது மப்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.