/* */

லாரி டிரைவர் மீது தாக்குதல்- 2 பேர் கைது

லாரி டிரைவர் மீது தாக்குதல்- 2 பேர் கைது
X

திருவள்ளூர் மாவட்டம் வெண்மனம் புதூர் கிராமத்தில் லாரி டிரைவரை தாக்கியதாக 2 பேர் மீது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மணக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் (36). டிப்பர் லாரி டிரைவரான இவர் லாரியில் ராமன் கோயில் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து அரசு குவாரியில் சவுடு மணலை ஏற்றிக்கொண்டு வெண்மனம் புதூர் ஏரிக்கரையோரம் வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தீனா (24) மற்றும் அஜித் ஆகிய இருவரும் டிரைவர் பரசுராமனை இவ்வழியாக வந்தது குறித்து அவதூறாக பேசி கையில் வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்ததாக தெரிகிறது.இதில் நெற்றியில் பலத்த காயம் அடைந்த டிரைவர் பரசுராமன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கடம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 April 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  3. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  7. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து