Begin typing your search above and press return to search.
காக்களூரில் முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை கத்தியால் வெட்டிய 4 பேர் கொண்ட கும்பல், போலீஸ் வலைவீச்சு
காக்களூர் தேவா நகர் பகுதியில் முன்விரோதம் காரணமாக கூலித் தொழிலாளியை கத்தியால் வெட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
திருவள்ளூரை அடுத்த காக்களூர் தேவா நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் துரை இவரது மகன் சார்லஸ் என்ற முருகையன் (40) கூலித்தொழிலாளி.
நேற்று சார்லஸ் வீட்டிலிருந்த போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஹரிஷ் உட்பட 4 பேர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோத அதை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் தாக்கினர். பின்னர் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதில் காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக ஹரிஷ் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.