/* */

திருவள்ளூரில் கொரோனா விதிகளை மீறி 3 கடைகளுக்கு சீல்

திருவள்ளூர் பஜார் வீதியில் கொரோனா விதிகளை மீறிய 3 நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் கொரோனா விதிகளை மீறி 3 கடைகளுக்கு சீல்
X

தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தொற்று அதிகம் பாதிக்கும் மாவட்டங்களில் திருவள்ளூர் மாவட்டம் 4வது இடத்தில் உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக காலை 10 மணி வரை கடை திறந்திருக்கலாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பஜார் வீதியில் காய்கறிக்கடை, மளிகை கடை திறந்திருப்பதால் திருவள்ளூர் மட்டுமல்லாது, அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் ஏராளமானோர் குவிந்து பொருட்களை வாங்க செல்கின்றனர்.

கூட்டம் கூடுவதை தவிர்க்க காவல்துறையினர் சார்பில் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனைக்கு பிறகே மார்க்கெட் பகுதிக்குள் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் நகர காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மற்றும் காவல்துறையினர் சார்பில் வியாபாரிகளும் கூட்டம் கூட அனுமதிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

எச்சரிக்கை விடுத்தும் பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததால் காவல்துறையினரின் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் நகராட்சி அதிகாரிகள் 3 மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.

Updated On: 19 May 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?