Begin typing your search above and press return to search.
திருவள்ளூரில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.
HIGHLIGHTS
திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 84 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 70 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 788 ஆக உள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,707 ஆகவும், இதில் 1,11,162 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1757 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.