/* */

குழந்தை திருமணத்தில் தொடர்பா? 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை: திருவள்ளூர் கலெக்டர்

குழந்தை திருமணத்தில் தொடர்பு இருந்தால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை (அ) ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

குழந்தை திருமணத்தில் தொடர்பா? 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை: திருவள்ளூர் கலெக்டர்
X

திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா.

திருவள்ளூர் கலெக்டர் குழந்தை திருமணம் தொடர்பாக அளித்த பேட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடந்து வருகிறது. அதாவது 18வயது நிறைவடையாத பெண் 21வயது நிறைவடையாத ஆண் திருமணம் நடந்தால் அது குழந்தை திருமணமாகும். மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 28 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில் உள்ளன.

குழந்தைத் திருமணம் செய்வதன் மூலம், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும், தாய்-சேய் மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. ரத்த சோகை, உடல் மற்றும் மனம் பாதிப்படைவதால் பல நோய்கள் ஏற்படவும், படிக்கும் பருவத்தில் திருமணம் செய்வதால் கல்வியறிவு தடைப்பட்டு, தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்பு உள்ளது.

திருமண தடைச்சட்டம் 2006ன் படி குழந்தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதில் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை அல்லது 1லட்சம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் குழந்தை திருமணத்தை நடத்தியவர் மற்றும் நடத்த தூண்டியவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொண்டவர்கள், பதிப்பக உரிமையாளர், மந்திரம் ஓதுபவர், மண்டப உரிமையாளர் உட்பட அனைவரும் குற்றவாளிகள்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க இலவச அழைப்பு எண் - 1098, பெண்கள் உதவி தொடர்பு எண் - 181, மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் - 044 29896049 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் தொலைபேசி எண் - 044 27665595 ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் குழந்தை திருமணம் இல்லா திருவள்ளூர் மாவட்டம் என்று உறுதி கூறுவோம் என கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Updated On: 4 Jun 2021 2:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...