Begin typing your search above and press return to search.
திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு கொரோனா தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
HIGHLIGHTS
திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 65 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 51பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று 4 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 708 ஆக உள்ளது.
மேலும், இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,16,011 ஆகவும், இதில் 1,13,511 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தாெற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1792 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.