/* */

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை
X

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருப்பாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலு வயது (46) இவருக்கு மகனும், 15 வயதில் மகளும் உள்ளனர்.

இந்நிலையில் 4.5.2021 அன்று காலை 8.30 மணியளவில் வழக்கம் போல் வேலு வேலைக்கு சென்றுவிட்டார். அதனை தொடர்ந்து 12 மணியளவில் அவரது மனைவியும் கடைக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி தனது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தந்தை வேலுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்னவென்று காவல்துறையினர் தீவரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 6 May 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  10. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!