/* */

பட்டப்பகலில் வீட்டில் 6 சவரன் நகை கொள்ளை

பட்டப்பகலில் வீட்டில் 6 சவரன் நகை கொள்ளை
X

மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரவாயல் கங்கை அம்மன் நகர் 8வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (43) பெயிண்டர். இவரது மனைவி தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர்களது மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சுரேஷூம் அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 6 சவரன் நகை, ரூ. 25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் புகாரின் அடிப்படையில் மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 3 April 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது