/* */

அரசு பள்ளியில் கதை சொல்லி கல்வி கற்பிக்கும் திட்டம்: ஆட்சியர் தொடக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கதைசொல்லி கல்வி கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது

HIGHLIGHTS

அரசு பள்ளியில் கதை சொல்லி கல்வி கற்பிக்கும் திட்டம்: ஆட்சியர் தொடக்கம்
X

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தாலுக்க மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது லைட்ஹவுஸ் ஊராட்சியில் கதைசொல்லி கற்பிக்கும் திட்டத்தை தொடக்கிவைத்த மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான்வர்கீஸ்

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி தாலுக்க மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது லைட்ஹவுஸ் ஊராட்சி. இந்த ஊரா ட்சியில் உள்ள கூனங்குப்பம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கதைசொல்லி கல்வி கற்பிக்கும் திட்டம் செயல்படுத்தபட்டது. அதன்படி மடிக்கணினி, கம்ப்யூட்டர் விளையாட்டு உபகரணங்கள், கேமராக்கள் அன்றாடம் பயன்படுத்த உதவும் கருவிகள், சைக்கிள், நாற்காலி உள்பட பல்வேறு வகையான பொருட்களை மாணவ-மாணவிகளுக்கு சொல்லி எளிதில் புரிய வைக்கும் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்கீஸ் திறந்து வைத்தார். பின்னர் இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.

இதில், மீஞ்சூர் ஒன்றிய குழுதலைவர் ஜி.ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வழகிஎர்ணாவூரன், தமின்ஷா, லைட்ஹவுஸ் ஊராட்சிமன்ற தலைவர் கஜேந்திரன், திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நல உரிமைபிரிவு அமைப்பாளர் பழவை முகமது அலவி, கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 25 April 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு