Begin typing your search above and press return to search.
மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்
அத்தங்கிகாவனூர் கிராமத்தில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்; 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அத்தங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மினி வேனில் மணல் கடத்துவதாக, வெங்கல் காவல் நிலையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த மினி வேனை விட்டு விட்டு டிரைவர், உரிமையாளர், உதவியாளர் ஆகிய மூவரும் தப்பி ஓடிவிட்டனர். எனவே போலீசார் மணலுடன் அந்த மினி வேனை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளிகள் 3பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.