/* */

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்கம்

பொன்னேரியில் 10 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்கி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து சேவை மீண்டும் துவக்கம்
X

பொன்னேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் சேவையை அமைச்சர் நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆமூர், மாலிவாக்கம், அழிஞ்சிவாக்கம், உள்ளிட்ட கிராமங்களில் இந்த வழியாக தடம் டி 41 அரசு பேருந்து ஆமூர் கங்காடிகுப்பம், மாலிவாக்கம், செங்குன்றம் வழியாக இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பத்தாண்டுகளாக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சுற்று வட்டார கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர்

இது குறித்து அப்பகுதி மக்கள் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கையின் பேரில் கடந்த 10 ஆண்டுகளாக இயக்கப்படமால் இருந்த பேருந்து சேவையை பால்வள துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் திருவள்ளுா் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன்,மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Jun 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!