/* */

எளாவூர் சோதனை சாவடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனை சாவடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

எளாவூர் சோதனை சாவடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது
X
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் திவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியாக வரும் வாகனங்களை ஒவ்வொன்றாக இன்று அதிகாலை முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து ஆந்திரா இருந்து சென்னைக்கு வந்த அரசு பேருந்தில் திடீரென ஒருவர் வேகமாக இறங்கி நடந்து சென்றார்.

இதை சுதாரித்துக்கொண்ட ஆரம்பாக்கம் போலீசார் அவரை மடக்கிப் பிடித்து சோதனை செய்ததில் அவர் கொண்டுவந்த பையில் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

பின்னர் அவரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியதில், சென்னை கொடுங்கையூர் சேர்ந்த வினோத்(31) என்பது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கஞ்சா நெல்லூரில் இருந்து சென்னை பகுதிகளுக்கு விற்கப்படுவதாக முதல்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

Updated On: 15 Feb 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்