/* */

37 ஆம் நாள் மண்டல அபிஷேக விழா : செங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்..!

இலச்சிவாக்கம் கிராமத்தில் கும்பாபிஷேகத்தை அடுத்து 37 ஆம் நாள் மண்டல அபிஷேக விழாவில் செங்காளம்மன் திருக்கோவிலில் 10,008 வளையல் அலங்காரம் நடைபெற்றது.

HIGHLIGHTS

37 ஆம் நாள் மண்டல அபிஷேக விழா : செங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்..!
X

மண்டலாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் 

150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலச்சிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் திருக்கோவிலில் 10,008 வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், இலச்சிவாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் திருக்கோவில் உள்ளது.150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு கடந்த 2000-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில்,இக்கோவிலை கிராம மக்கள் புணர் அமைத்து 24 ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய பொலிவுடன் மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.கடந்த பிப்ரவரி 12-ம் தேதி முதல் தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.


இதில்,37-வது நாளான இன்று மண்டலபிஷேக நிகழ்ச்சியும், பங்குனி மாத செவ்வாய்க்கிழமை என்பதாலும் மூலவருக்கு பால்,தயிர்,பன்னீர்,இளநீர், ஜவ்வாது,சொர்ணம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர்.இதன் பின்னர், மாலை மூலவருக்கு பத்தாயிரத்தி எட்டு வளையல்களால் சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டது.இதன் பின்னர், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர், பக்தர்களுக்கு மஞ்சள்,குங்குமம்,விபூதி,

வளையல்,தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள்,விழா குழுவினர்கள்,ஊர் பெரியவர்கள்,ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 22 March 2024 5:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை