/* */

தடுப்பணையில் குளிக்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு

ஆரணியாற்றின் தடுப்பணையில் குளிக்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

தடுப்பணையில் குளிக்க சென்ற 9ஆம் வகுப்பு மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழப்பு
X

திவாகர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணியை சேர்ந்த திவாகர் (15). அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். ரம்ஜான் விடுமுறை நாளில் நண்பர்களுடன் ஆரணியாற்றின் தடுப்பணையில் குளிக்க சென்றார். அப்போது திவாகர் ஆற்றில் தேங்கி இருந்த சேற்றில் சிக்கி தத்தளித்தார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து கவரைப்பேட்டை போலீசார் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத ப‌ரிசோதனை‌க்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 May 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’