/* */

அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு

அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

அதானி காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு
X

அதானி துறைமுகத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி நடத்தினர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை சார்பாக ஆந்திரா மாநிலம் சித்தூர் முதல் தச்சூர் வரையில் சென்னை அருகே உள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இணைக்கும் வகையில் ஆறு வழிச்சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் பள்ளிப்பட்டு மற்றும் ஊத்துக்கோட்டை தாலுகாவில் உள்ள 34 கிராமங்கள் வழியாக 116 கிலோ மீட்டர் தொலைவில் 1238 ஏக்கர் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டங்களாக விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் .

இந்நிலையில் ஊத்துக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பெரியபாளையம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியிலிருந்து ராமலிங்கபுரம் பகுதி வரை ஊத்துக்கோட்டை வட்டக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறு வழி சாலை திட்டத்தை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்று பாதையில் கொண்டு செல்லும் வலியுறுத்தி 34 கிராமங்கள் சென்று துண்டறிக்கை அளித்து இருசக்கர வாகனப் பிரச்சார விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர்.

Updated On: 20 Jun 2022 2:46 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு