/* */

குடிப்பதை கண்டித்த மனனையிடம் தகராறு: கணவர் தூக்கிட்டு தற்கொலை.

மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

குடிப்பதை கண்டித்த மனனையிடம் தகராறு: கணவர் தூக்கிட்டு தற்கொலை.
X

பைல் படம்

கும்மிடிப்பூண்டி அடுத்த கோங்கல் மேட்டில் மனைவி திட்டியதால் கணவர் கைது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம். ஈகுவார்பாளையம் ஊராட்சி, கோங்கள் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் (40) . இவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவர்கள் பரிந்துரையின் படி, மது அருந்துவதை தவிர்த்து வந்த பிரசாத் ,நேற்று இரவு மது அருந்தி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த இவரது மனைவி பிரசாத்தை திட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவி திட்டியதால் மனமுடைந்த பிரசாத், அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டின் அருகே உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதிரி வேடு காவல் நிலைய போலீசார் பிரசாத்தின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக் காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் சென்ற முதியவர் தவறி விழுந்து உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், ஆரம்பாக்கம் மீன் மார்க்கெட்டில் மீன் கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் நடராஜ் (52). இவர் வழக்கம் போல் ஆரம்பாக்கம் மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்து விட்டு மாலை ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட ஆட்டோவில் பெருவேடு கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் பாரதி நகர் என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோ செலுத்திய போது திடீரென ஆட்டோ நிலை குலைந்தது. அப்போது ஆட்டோவில் பயணம் செய்த முதியவர் அதிலிருந்து கீழே தவறி விழுந்தார்.

இந்விபத்தில், நடராஜனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை திருவெற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலே உயிரிழந்த தாக தெரிவித்தார். முதியவர் உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Updated On: 21 March 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...