/* */

சூரவரிகண்டிகையில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே செங்கல் ஏற்றிச்சென்ற லாரி நடுரோட்டில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

சூரவரிகண்டிகையில் செங்கல் லாரி கவிழ்ந்து விபத்து; 5 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான லாரி.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தனியாருக்கு சொந்தமான செங்கல் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு மாதர்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வழியில் சூரவரிகண்டிகை என்ற இடத்தில் சென்றபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது.

இதில் செங்கல் லாரியில் இருந்த மாத்தையா, போலையா, ஆஞ்சநேயாலு, அங்கையா மற்றும் ஓட்டுநரான கார்த்திக் உள்ளிட்ட 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயத்துடன் அனைவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சாலை குண்டும் குழியுமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

Updated On: 20 Aug 2021 9:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!