/* */

திருவள்ளூர்:1000 ஆக்ஸிஜன் படுக்கை அமைக்கும் பணி- அமைச்சர் நாசர் தகவல்!

திருவள்ளூர் மாவட்டத்தில் 1000 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் கூறினார்.

HIGHLIGHTS

திருவள்ளூர்:1000 ஆக்ஸிஜன் படுக்கை அமைக்கும் பணி- அமைச்சர் நாசர் தகவல்!
X

அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் படுக்கைகள், கழிவறைகள், மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தும் விதமாக சுமார் 1000 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஆவடியில் உள்ள அம்மா திருமண மண்டபத்தில் 112 ஆக்ஸிஜன் படுக்கைகள் அமைக்கப்பட்டு ஒரு வாரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 May 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...