/* */

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

ஆவடி அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருநின்றவூர் அருந்ததி பாளையத்தில் வசித்து வருபவர் ஜெகதீஸ்வரன் (39). இவருக்கு திருமணம் ஆகி மனைவி சரஸ்வதி ஒரு மகன் நகுல் உள்ளனர். ஜெகதீஸ்வரன் தனியார் நிறுவனத்தில் ஒன்றில் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

வழக்கம் போல் காலை சரஸ்வதி வீட்டு வேலைகளை முடித்துவிட்டு தனது மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.

அதன்பிறகு சம்பவத்தன்று மதியம் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் சரஸ்வதிக்கு போன் செய்து உங்கள் கணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கணவர் ஜெகதீஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு கதறி கூச்சலிட்டு அழுதுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் திருநின்றவூர் போலீசார் விரைந்து வந்து ஜெகதீஸ்வரனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து குடும்பத் தகராறு காரணமாக ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேலை பார்த்த நிறுவனத்தில் பிரச்சனையா அல்லது கடன் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 March 2023 4:57 AM GMT

Related News